ஜீவ ஊற்று – அன்பின் கரம் அமைப்பின் தற்சார்பு பொருளாதார மேம்பாட்டு பயிற்சிகள் தொடர்ச்சி

இலங்கையில் பெண்களின் தற்சார்பு பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஜீவ ஊற்று – அன்பின் கரம் அமைப்பு, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை மையமாகக் கொண்டு பல்வேறு தொழில் பயிற்சி திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறது.
அந்த வகையில், தலைமத்துவ திறன் கொண்ட பெண்களுக்கும், கல்வி முடித்தும் வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் தங்களுக்கென ஒரு தற்சார்பு வருமான வாய்ப்பை உருவாக்கும் நோக்கில் தையல் மற்றும் ஆரி பயிற்சிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
இப் பயிற்சிகள் மூலம் பெண்கள் சுயதொழில் செய்யும் திறனை பெறுவதுடன், குடும்ப பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் வாய்ப்பையும் பெற்றுவருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, கிளிநொச்சி மணியங்குளம் பகுதியில் புதிய அணிக்கான தையல் மற்றும் ஆரி பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட இருக்கின்றன. இந்தப் பயிற்சி திட்டத்தில் புதிய மாணவர்களும் இணைக்கப்பட்டுள்ளதுடன், பயிற்சிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளதாக அமைப்பு தெரிவித்துள்ளது.
பெண்களின் சுயநிலையும் சமூக முன்னேற்றமும் உறுதி செய்யும் நோக்கில் இத்தகைய பயிற்சி முயற்சிகள் எதிர்காலத்திலும் தொடரும் என ஜீவ ஊற்று – அன்பின் கரம் அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

































































