வவுனியா மாவட்டத்தினைச் சேர்ந்த 10 குடும்பங்களிற்கு கூரைத்தறப்பாள்கள் வழங்கி வைக்கப்பட்டமை

மழையிலும் நம்பிக்கையிலும் நனைந்த கனவுகள்…
இன்றைய தினத்தில் வவுனியாவின் வேலங்குளம் மற்றும் முன் கங்கங்குளம் பகுதிகளில், ஐீவ ஊற்றுஅன்பின்கரம் – தாயக மனிதநேய அமைப்பு வழியாக
லண்டன் நாட்டைச் சேர்ந்த திரு. பாவு அண்ணா அவர்களின் நிதியுதவியினால்
10 குடும்பங்கள் தங்களது வீடுகளுக்கான புதிய கூரைத்தறப்பாள்களை (Roof Sheets) பெற்றுக் கொண்டனர்.
முன்னரும் பல குடும்பங்களுக்கு வழங்கப்பட்டிருந்ததுடன், இன்னும் சில குடும்பங்கள் மழைநீர் கசிந்த கூரையின் கீழ் குழந்தைகளுடன் நித்திரை இழந்து வாழ்ந்து வந்தன.
அந்த நிதர்சனத்தை உணர்ந்து மழைக்காலம் நெருங்கும் இந்த நேரத்தில், அவர்களின் வாழ்வில் சிறு ஒளியாக இந்த நலத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்த அரிய மனிதநேயச் செயலை சாத்தியப்படுத்திய அனைவருக்கும்
எமது இதயப்பூர்வமான நன்றிகள்!
நிதியுதவி: திரு. பாவு அண்ணா (லண்டன்)
ஒழுங்கமைப்பு: கிராம அபிவிருத்தி சங்கத்தின் பாபா அக்கா
ஆதரவு: சர்வதேச மனித உரிமைகள் மையத்தின் செயலாளர்,
சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் குழுவினர்
எங்கள் வேண்டுகோள்
அவர்களின் கனவுகள் இன்னும் நனைந்தவையே…
அவர்களுக்கும் ஒரு பாதுகாப்பான வீடு கிடைக்கட்டும் என்பதே எங்கள் ஆசை.
ஒரு தறப்பாள், ஒரு வீடு, ஒரு புன்னகை — அவர்களின் வாழ்க்கையை மாற்றும் சக்தியாக மாறலாம்.
“ஐீவ ஊற்று” வழியாக இந்த நலத்திட்டத்தில் பங்கெடுத்து, மக்களின் நம்பிக்கை மழையில் நீங்களும் ஒளியாகுங்கள்!
📞 தொடர்புக்கு:
📍 ஐீவஊற்று அன்பின்கரம்– தாயக மனிதநேய அமைப்பு
📲 +0032499837861
www.jeevaootru.com
🌧️ மழை பொழியும் வேளையிலும் நம்பிக்கை நனைக்கட்டும்,
🏠 மனிதநேயம் துளியாக வீடுகள் எழும்பட்டும்!














