புதுக்குடியிருப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டமை

ஜீவஊற்று அன்பின் கரம் அறக்கட்டளையினால் புதுக்குடியிருப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உலர் உணவு பொதி வழங்கல்
ஜீவஊற்று அன்பின் கரம் அறக்கட்டளையினால், புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள எழுகை மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் அலுவலகத்தில் வைத்து, மாற்றுத்திறனாளிகள் 50 பேருக்கு உலர் உணவு பொதி வழங்கும் நிகழ்வு இன்றையதினம் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், ஜீவஊற்று அன்பின் கரம் அறக்கட்டளை பல வருடங்களாக இன்று நேற்று அல்லாமல், இன, மத பேதங்கள் இன்றி தங்களால் இயன்ற உதவிகளை இலங்கையின் பல மாவட்டங்களில் வாழும் தாயக மக்களுக்கு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். அந்த தொடர்ச்சியான மனிதாபிமான சேவையின் ஒரு பகுதியாகவே, இன்றையதினம் புதுக்குடியிருப்பு பகுதியிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான இவ்வுதவி வழங்கப்பட்டது.
குறித்த உலர் உணவு பொதிகளை வழங்கும் நிகழ்வில், ஜீவஊற்று அன்பின் கரம் அறக்கட்டளையின் ஸ்தாபகர் ஜெ. ஜீவன் அவர்களுக்கும், இவ்வுதவிக்காக நிதி உதவி புரிந்த Apostolic Church Kolding, Denmark மற்றும் Rehoboth Ministries Kolding ஆகிய அமைப்புகளுக்கும், நிதியை ஏற்பாடு செய்தவர்களுக்கும், இவ்வுதவியை நேரடியாக வருகை தந்து வழங்கி வைத்த பிரவின் மாஸ்டர் அவர்களுக்கும், உதவி பெற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏற்பாட்டாளர்கள் தங்களின் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
இத்தகைய மனிதநேய செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், இதன் மூலம் பல குடும்பங்கள் பயனடைய வாய்ப்புள்ளதாகவும் நிகழ்வில் கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.











































