யாழ் மாவட்டத்தில் 131 ஆவது இல்லம் மாற்று திறனாளி குடும்பத்திற்கு வழங்கி வைக்கப்பட்டது

ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பானது sk vlog யூடியுப்சனல்(கிருஷ்ணாவுடன்) கைகோர்த்து பல்வேறு விதமான மனித நேயமிக்க பணிகளை ஆற்றி வருகின்றது.
விசேடமாக நிரந்தர வீடின்றி வாழும் குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை நிர்மாணித்து கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் கடந்த 13/11/2025 அன்று sk vlog யூடியுப்சனல் கிருஷ்ணாவின் 04 ஆவது இல்லமும் ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் 131 ஆவது இல்லமும் மாற்று திறனாளியான குடும்பத்தினருக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இவ் இல்லமானது யாழ் மாவட்ட சங்கானை பிரதேசத்தில் பல்வேறான இன்னல்களுடன் வீடற்ற நிலையில் வாழ்ந்து வந்த மாற்று திறனாளியான குடும்பத்திற்கே வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான நிதி உதவியை sk vlog யூடியுப்சனல்(கிருஷ்ணாவின்) ஏற்பாட்டில் நகுலா பாலசங்கர் (சுவிஸ்) அவர்கள் நிதி உதவி வழங்கியுள்ளார்கள். மாற்று திறனாளி பயனாளர்களுக்கு கையளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ் மகத்தான உதவியினை நல்கிய அண்ணனுக்கு எம் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இவ்வாறான அன்பின் இல்லங்களை நீங்கள் எம் உறவுகளுக்கு நிர்மாணித்துக் கொடுக்க விரும்பினால் எம்மை தொடர்பு கொள்ளவும்.
குறிப்பாக தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்கின்றதால் இவர்களின் வாழ்வில் ஒளியேற்ற உதவும் பேருள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.
நன்றி
JEEVAOOTRU trust
https://www.jeevaootru.com
contact@jeevaootru.com













