மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் 174 ஆவது இல்லத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டமை

ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பானது SQM அமைப்போடு கைகோர்த்து பல்வேறு விதமான மனித நேயமிக்க பணிகளை ஆற்றி வருகின்றது.
விசேடமாக நிரந்தர வீடின்றி வாழும் குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை நிர்மாணித்து கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் கடந்த 19.07.2025 அன்று SQM Foundation Canada இனது 37 ஆவது இல்லமும் ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் 174 ஆவது இல்லத்திற்கான அடிக்கல் வைத்தல் நிகழ்வு நடைபெற்றது
இவ் இல்லமானது மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேசத்திற்கு உட்பட்ட தேற்றாத்தீவு பகுதியில் பல்வேறான இன்னல்களுடன் வீடற்ற நிலையில் வாழ்ந்து வந்த குடும்பத்திற்கே வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான நிதி உதவியை SQM Foundation Canada அமைப்பினது ஸ்தாபகர் கமலநாதன் பாக்கியராசா அண்ணா அவர்கள் வழங்கியுள்ளார்கள்.
இம் மகத்தான உதவியினை நல்கிய அண்ணனுக்கு எம் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இவ்வாறான அன்பின் இல்லங்களை நீங்கள் உறவுகளுக்கு நிர்மாணித்துக் கொடுக்க விரும்பினால் எம்மை தொடர்பு கொள்ளவும்.
குறிப்பாக தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்கின்றதால் இவர்களின் வாழ்வில் ஒளியேற்ற உதவும் பேருள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.
_நன்றி_
JEEVAOOTRU trust
https://www.jeevaootru.com
contact@jeevaootru.com















