மட்டக்களப்பு மாவட்ட தேத்தாதீவு பகுதியில் 129 ஆவது இல்லம் வழங்கி வைப்பு

நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வாழ்வதற்கே வழியின்றி தவிக்கின்ற போதிலும் ஜீவ ஊற்று அன்பின் கரமானது தன்னுடைய உன்னதமான பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றது.
விசேடமாக நிரந்தர வீடின்றி அல்லலுறுகின்ற மக்களிற்கு நிரந்தர வீடுகளை நிர்மாணித்து கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் 129 ஆவது இல்லம் பயன் பெறும் குடும்பத்தினரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இவ் இல்லமானது மட்டக்களப்பு மாவட்டத்தின் தேத்தாதீவு பகுதியில் பல்வேறான இன்னல்களுடன் வீடற்ற நிலையில் வாழ்ந்து வந்த குடும்பத்திற்கே வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான நிதி உதவியை RJ Tamizhan YouTube Channel ஊடாக, கனடாவில் வசிக்கின்ற வடிவேலு அன்னலட்சுமி குடும்பத்தினர் வழங்கியுள்ளனர். இவ் இல்லம் இவர்களின் முதலாவது இல்லம் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ் மகத்தான உதவியினை நல்கிய உறவுகளிற்கு எம் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அத்தோடு கூட தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்கின்றதால் ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்ற உதவும் பேருள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.
நன்றி
JEEVAOOTRU trust
https://www.jeevaootru.com
contact@jeevaootru.com

















