மட்டக்களப்பு மாவட்ட பெரியபோரதீவு பகுதியில் 164 ஆவது இல்லத்திற்கான அடிக்கல் வைக்கப்பட்டமை

நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வாழ்வதற்கே வழியின்றி தவிக்கின்ற போதிலும் “ஜீவ ஊற்று அன்பின் கரத்தினரும் SQM அமைப்பினரும் கைகோர்த்து தங்களுடைய உன்னதமான பணிகளை சிறப்பாக செய்து வருகின்றனர்.
விசேடமாக நிரந்தர வீடின்றி அல்லலுறுகின்ற மக்களிற்கு நிரந்தர வீடுகளை நிர்மாணித்து கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் கடந்த 26.01.2025 அன்று ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் 164 ஆவது இல்லத்திற்கானதும் SQM Foundation Canada இனது 34 ஆவது இல்லத்திற்க்கானதுமான அடிக்கல் வைக்கப்பட்டுள்ளது.
இவ் இல்லமானது மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரியபோரதீவு பகுதியில் பல்வேறான இன்னல்களுடன் வீடற்ற நிலையில் வாழ்ந்து வந்த குடும்பத்திற்கே வழங்கப்படவுள்ளது.
இதற்கான நிதி உதவியை SQM Foundation Canada இனது ஸ்தாபகர் பாக்கியராசா கமலநாதன் அண்ணா அவர்கள் வழங்கியுள்ளார்.
இவ் மகத்தான உதவியினை நல்கிய அண்ணனுக்கு எம் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அத்தோடு கூட தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்கின்றதால் ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்ற உதவும் பேருள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.
நன்றி
JEEVAOOTRU trust
https://www.jeevaootru.com
contact@jeevaootru.com


















