• contact@jeevaootru.com
  • +32 499 837 861
Jeevaootru
  • Donate
  • Menu Canvas
    • முகப்பு
    • நிரந்தர வீடு கட்டுமானப்பணி
    • நிரந்தர வீடு கையளிப்பு
    • கல்வி உதவி
    • நிவாரண உதவி
    • மருத்துவ உதவி
    • வாழ்வாதாரம்
    • ஏனையவை
      • Members
      • About Us
      • Contact
      • Accounts
Jeevaootru
  • முகப்பு
  • நிவாரண உதவி
  • நிரந்தர வீடு கையளிப்பு
  • வாழ்வாதாரம்
  • மருத்துவ உதவி
  • வாழ்வாதாரம்

யாழ் அரியாலையில் ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் நான்காவது கிளை திறந்து வைக்கப்பட்டமை

Jeevaootru
July 31, 2026
ஜீவ ஊற்று அன்பின் கரம்

பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட இலவச தொழிற்பயிற்சி நெறி

பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயற்பட்டு வரும் ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் நான்காவது கிளை அலுவலகம் இன்று யாழ்ப்பாணம், அரியாலையில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்வு தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பமானது. தொடர்ந்து விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதுடன், பிரதம அதிதியாக கலந்துகொண்ட யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் த. சத்தியமூர்த்தி அவர்கள் நாடா வெட்டி புதிய கிளை அலுவலகத்தை திறந்து வைத்தார்.

ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலையரசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தனிமனித மேம்பாட்டு வழிநடத்துனரும் பத்மஷாலா நல்வாழ்வு நிறுவனத்தின் நிறுவுனருமான நளினாசினி அம்பிகைபாதன், வன்னி தமிழ் மக்கள் ஒன்றியத்தின் நிறுவனர் தரன் ஶ்ரீ, வன்னி தமிழீழ மக்கள் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் நிரூபன் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

புதிய கிளை அலுவலகத்தின் ஊடாக பெண்களுக்கான தையல் பயிற்சி, ஆரி வேலைப்பாடு, கேக் ஐசிங், அழகுக்கலை உள்ளிட்ட பல்வேறு இலவச தொழிற்பயிற்சி வகுப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதன் முதற்கட்டமாக, கிறிஸ்தோபர் மற்றும் எமி (கனடா) அவர்களின் நிதி அனுசரணையில் தையல் பயிற்சி நெறி இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பெண்களுக்கு தொழில்திறன்களை வழங்கி, அவர்களின் பொருளாதார முன்னேற்றத்தையும் தன்னம்பிக்கையையும் உயர்த்தும் நோக்கில் இந்த இலவச கற்கைநெறிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக யாழ்ப்பாணத்தில் ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் நான்காவது கிளை அலுவலகம் திறந்து வைக்கப்பட்டிருப்பது சமூக முன்னேற்றத்தை நோக்கிய முக்கியமான முயற்சியாகக் கருதப்படுகிறது.

Follow US

facebook youtube 32ins twitter youtube
Article by Jeevaootru

Previous Story
முல்லைத்தீவு அலுவலகத்தில் நடைபெற்று வரும் அழகுக்கலை மற்றும் கேக் ஐசிங் பயிற்சி
Next Story
கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பிரதேச தையல் பயிற்சி நிறைவு

Leave your comment Cancel Reply

(will not be shared)

Recent Post

  • களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் தையல், ஆரி, கேக் பயிற்சி ஆரம்பம் Monday, 3, Aug
  • யாழ்ப்பாணத்தில் தையல் பயிற்சி ஆரம்பம் Monday, 3, Aug
  • மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் நிறைவடைந்த ஆரி பயிற்சி நெறி Saturday, 1, Aug
  • மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் வெற்றிகரமாக நிறைவடைந்த தையல் பயிற்சி Saturday, 1, Aug
  • கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பிரதேச தையல் பயிற்சி நிறைவு Saturday, 1, Aug
[yourchannel user="Jeevaootru Trust -official-"]

About Us

+32 499 83 78 61

Thambirajah Jejeevan ,

Egelsvennen 23,
2400 Mol ,

Belgium

Contact Info

Contact Us

contact@jeevaootru.ngo

Need Help

Help@jeevaootru.ngo

Recent Post

  • களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் தையல், ஆரி, கேக் பயிற்சி ஆரம்பம் Monday, 3, Aug
  • யாழ்ப்பாணத்தில் தையல் பயிற்சி ஆரம்பம் Monday, 3, Aug

Tags

Charity Education Enviroment
Copyright ©2023 jeevaootru.ngo. All Rights Reserved. Developed By Akkenum Interactive
SearchPostsLogin
Monday, 3, Aug
களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் தையல், ஆரி, கேக் பயிற்சி ஆரம்பம்
Monday, 3, Aug
யாழ்ப்பாணத்தில் தையல் பயிற்சி ஆரம்பம்
Saturday, 1, Aug
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் நிறைவடைந்த ஆரி பயிற்சி நெறி
Saturday, 1, Aug
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் வெற்றிகரமாக நிறைவடைந்த தையல் பயிற்சி
Saturday, 1, Aug
கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பிரதேச தையல் பயிற்சி நிறைவு
Friday, 31, Jul
யாழ் அரியாலையில் ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் நான்காவது கிளை திறந்து வைக்கப்பட்டமை

Welcome back,