மட்டக்களப்பு மாவட்ட களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் புதிய தையல் பயிற்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டமை

ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் இரண்டாவது கிளை மட்டக்களப்பு மண்ணில்!
ஜீவ ஊற்று அன்பின் கரமானது இதுவரையில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலேயே தன்னுடைய சேவையை ஆற்றி வந்துள்ளது.
தற்பொழுது தற்சார்பு பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் புதிதாக உதயமாகிறது ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் தையல் பயிற்சி நிலையம்.
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குபட்பட்ட களுவாஞ்சிகுடி கிராமத்தில் தையல் பயிற்சி நிலையம் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஜீவ ஊற்று அன்பின் கரம் எனும் தன்னார்வ நிறுவனத்தினால் அப்பகுதி யுவதிகளுக்கு இலவசமாக இந்த தையல் பயிற்சி நெறி வழங்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் உருத்திரன் உதயஸ்ரீதர், ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் தலைவர் ஜோன் தயாழினி, தொழிலதிபர் பாக்கியராசா கமலநாதன், மதத் தலைவர்கள், அவ்வமைப்பின் தொண்டர்கள், என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த தையல் தொழில் பயிற்சி நிலையத்தில் அப்பகுதியிலுள்ள யுவதிகளுக்கு, இலவசமாக பயிற்சிகள் வழங்கப்பட்டு, அவர்கள் எதிர்காலத்தில் சுய பொருளாதாரத்தில் முன்னேறக்கூடிய வகையில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக இதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
குறித்த நிகழ்வுக்கான ஒழுங்குபடுத்தல ஜெஜீவன் மற்றும் ரொஷான் (சுவிஸ்) அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.
























































































