முல்லைத்தீவு மாவட்ட கள்ளப்பாடு எனும் கிராமத்தில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டமை

ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் மூலம் இன்றைய நாளிலும் (21.12.2023) உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இப் பணிக்கான நிதி உதவியை நெதர்லாந்து தேசத்தில் வாழ்கின்றதான சாந்தன் அண்ணா வழங்கியிருந்தார்.
இவ் உதவியானது முல்லைத்தீவு மாவட்டத்தில் கள்ளப்பாடு எனும் கிராமத்தில் தெரிவுசெய்யப்பட்ட குடும்ப உறவுகளுக்கே வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
சாந்தன் அண்ணாவிற்கு உதவியினை பெற்ற மக்கள் சார்பாக எம் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
எம் தேசத்தில் இன்னல்களுக்குள்ளான அநேகமானோர் வாழ்கின்றனர். இவர்களின் தேவையை நிறைவேற்ற உதவும் பேருள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.









