கிளிநொச்சியில் 92 ஆவது இல்லம் பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டமை

ஜீவஊற்று அன்பின் கரத்தோடு கைகோர்த்து   Mission Mail நிறுவனமானது தன்னுடைய முதலாவது இல்லத்தை நிர்மாணித்து வழங்கியுள்ளது. அந்தவகையில், இன்றைய நாளிலும் (22.02.2023) அன்பின் இல்லமானது  பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ் இல்லமானது”ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பினுடைய 92 ஆவது  இல்லமும் அதே சமயம் Mission Mail நிறுவனத்தின் 1 ஆவது இல்லம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ் இல்லமானது கிளிநொச்சி மாவட்டத்தில்  தனித்து நின்று வாழும்  பொருளாதாரத்தில் பின்தங்கியநிலையில் பல்வேறு இன்னல்களுடன் வாழ்ந்து வருகின்ற பெண்ணிற்கே வழங்கப்பட்டுள்ளது.  இல்லத்திற்கான  நிதி உதவியினை நெதர்லாந்து தேசத்தில் செயற்படுகின்றதான Mission Mail நிறுவனத்தினர்வழங்கியுள்ளனர். இவ் இல்லத்தினை அமைத்துக் கொடுப்பதற்கு  சகல விதத்திலும்  உதவிய  அன்பு உறவுகளிற்கு எங்கள்நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.  வழங்கிய  அதேவேளையில் தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்வதால் உதவும் உள்ளம் படைத்தவர்கள் எம்மைதொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்   நன்றி. Email – info@jeevaootru.org Web.  – jeevaootru.org

0
372

கிளிநொச்சி மாவட்ட முறுகண்டியில் 58 ஆவது இல்லம் அமைத்து வழங்கப்பட்டது

ஜீவஊற்று அன்பின் கரத்தினர் நாட்டின் அசாதாரண சூழ்நிலையிலும் அன்பின் இல்லங்களை மிக துரிதமாக அமைத்து வழங்கி வருகின்றனர். அந்தவகையில், இன்றைய நாளிலும் (26.05.2022) அன்பின் இல்லம், மலசலகூடம்…

0
757

கிளிநொச்சி மாவட்டத்தில் 50 ஆவது இல்லம் வழங்கப்பட்டது

“ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பானது நிர்மாணித்துக் கொடுத்த 50 ஆவது இல்லமானது கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடு பிரதேசத்தில் பொருளாதார நிலையில் பின்தங்கிய நிலையில் வாழ்கின்ற குடும்பத்திற் கு…

0
834

ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் 22வது இல்லம் திறப்புவிழா.

ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் 22வது இல்லம் ஊடாக மக்கள் நல்வாழ்வு மையம் இன்றைய நாளில் கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் வசிக்கின்ற பயனாளிக்கு வழங்கி வைக்கப்பட்டது. மக்கள்…

0
1256

20 ஆவது ஜீவ ஊற்று அன்பின் இல்லம் கையளிப்பு.

20 ஆவது ஜீவ ஊற்று அன்பின் இல்லம் கையளிப்பு. கிளிநொச்சி பிரதேசத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிக்குஇவ் இல்லம் கையளிக்எப்பட்டது. அமரத்துவம் அடைந்த ரேவதி அம்மாவின் நினைவாக ஜெர்மனி தேசத்தில்…

0
2164

ஜீவ ஊற்று அன்பின் பதினெட்டாவது இல்லம் பயனாளியிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது

ஜீவ ஊற்று அன்பின் பதினெட்டாவது இல்லம் பயனாளியிடம் இன்றைய நாளில் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த குடும்பஸ்தினருக்கே இந்த உதவியினை ஜீவ ஊற்று அன்பின்…

0
1900

ஒன்பதாவது ஜீவ ஊற்று அன்பின் இல்லம் பயனாளிக்கு வழங்கப்பட்டது

ஜீவ ஊற்று அன்பின் கரம் அறம் அறக்கட்டளை மற்றும் ஊடாக இன்றைய நாளில் (11.01.2020) ஜீவ ஊற்று அன்பின் ஒன்பதாவது இல்லம் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி…

0
1976